Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மது அருந்திவிட்டு குருத்வாராவுக்குள் சென்ற முதல்வர் மீது நடவடிக்கை: பாஜக புகார்

ஏப்ரல் 17, 2022 12:46

அமிர்தசரஸ்: சண்டிகர் சீக்கிய குருத்வாராவுக்குள் மது அருந்துவிட்டு நுழைந்ததாக, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு எதிராக, பா.ஜ., சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 14ம் தேதி, சீக்கிய புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அன்று, பதிண்டா மாவட்டத்தில் உள்ள, சீக்கிய குருத்வாராவுக்கு சென்ற முதல்வர் பகவந்த் மான், சிறப்பு வழிபாடு நடத்தினார்.

அதன் புகைப்படங்களையும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுஇருந்தார்.அவர் அந்த சமயத்தில் மது அருந்திவிட்டு வந்ததாக, குருத்வாராக்களை நிர்வகிக்கும், 'சிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி' நேற்று முன்தினம் குற்றஞ்சாட்டியது.

'இந்த செயலுக்கு பகவந்த் மான் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றும் அது வலியுறுத்தியது.

இந்நிலையில், மது அருந்திவிட்டு குருத்வாராவுக்குள் நுழைந்த பகவந்த் மானுக்கு எதிராக, பா.ஜ.,வை சேர்ந்த தஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர் போலீசிடம் புகார் அளித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்